இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கருவூலங்கள், முக்கிய பணிகள் தவிர பிற அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 1ம் தேதி பணி நாளாக கருதப்படும். தமிழகத்தில் பொதுவாக பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு தினங்கள் உள்ளூர் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பிறப்பிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. Read More Click Here