நன்றியுள்ள ஜீவன்
மனிதர்களுடன் அதிக நன்றியுடனும், நட்புடனும் பழகக்கூடிய விலங்கு நாய். தன்னை வளர்ப்பவர்களுக்காக உயிரைக்கூட கொடுக்கக்கூடிய ஒரு பிறவி தான் நாய். அந்த அளவிற்கு நன்றியுடனும், அன்புடனும் இருக்கக்கூடிய ஜீவன். இவ்வளவு அன்பாக இருக்கும் நாய்களின் ஒரு சில பழக்க வழக்கங்கள் நமக்கு சுத்தமாக பிடிக்காது. அதில், முக்கியமானது வீட்டில் இருக்கும் செருப்புகளை கடித்து குதறி வைப்பது.