தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகேஷ் குமார் ( வயது 24 ) . ராணுவ வீரரான இவர் , தேவாரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார் . இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இராணுவத்தில் துப்பாக்கி சூட்டில் யோகேஷ் உயிரிழந்தார் . இதைத்தொடர்ந்து யோகேஷின் தாயார் நாகரத்தினத்திடம் , விபத்து காப்பீட்டு தொகையான ரூ .50 லட்சத்துக்கான காசோலையை வங்கி மேலாளர் திரு . பால விக்னேஷ் வர பிரசாத் வழங்கினார் . அப்போது கேஷ் அதிகாரி திரு . ஆஷிக் அப்துல் கனி மற்றும் வங்கி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Read More Click Here