தமிழ்நாட்டில் இன்றில் இருந்து வெப்பநிலை உயரும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறி உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. வெயிலின் உக்கிரம் இப்போதைக்கு குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
Read More Click here