2022ல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பணி செய்த 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி :

 

கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்த ஆசிரியர்களில் 400 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால் இந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீடு பணிக்கு ஆசிரியர்கள் வர தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு தேர்வு முடிந்து ஏப்.,10 முதல் விடைத்தாள் மதிப்பீடு பணி தொடங்க உள்ளது. இந்த பணி மே 4 வரை நீடிக்கும். மாநில அளவில் 79 விடைத்தாள் திருத்தும் மையங்களில் 25 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். விடைத்தாள் மதிப்பீடு பணியில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர், கூர்ந்தாய்வு அலுவலர், முதன்மை தேர்வாளர் என ஒரு மாணவரின் விடைத்தாளை 3 பேர் கூர்ந்தாய்வு செய்த பின்னரே மதிப்பெண் உறுதி செய்யப்படும். Read  More Click here