தடுப்பூசி போட மறுத்தால் சிறை : எங்கு தெரியுமா..?

 

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சில தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவானவர்களே சென்றுள்ளனர். இதையடுத்து அந்நாட்டுப் பிரதமர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளதாவது: "நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 70 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் இலக்கு. இதுவரை 2.1 மில்லியன் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு, கடுமையான மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மக்கள் அரசின் ஆலோசனையைப் பொருட்படுத்த மறுப்பது எரிச்சலூட்டுவதாக உள்ளது. எனவே, கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும்" என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.