April 24 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு.

 


தமிழகத்தில் அதிதீவிரமாக கொரோனா பரவிவரும் இந்த தருணத்தில் .12ஆம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது .கல்லூரிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இரவு நேர ஊரடங்கு மற்றும் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது .பள்ளிகளில் ஆசிரியர்கள் அடுத்த ஆண்டிற்கான சேர்க்கை பணிகளில் ஈடுபட வேண்டும் என கூறப்பட்டுள்ளது .இதற்கிடையில் வரும் 24ந் தேதியில் இருந்து கோடை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன மேலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் முதல்வாரத்தில் தொடங்கும் என தெரியவருகிறது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கனிவான வேண்டுகோள் :

பெறுதல்

மதிப்புமிகு. தீரஜ்குமார், இ.ஆ.ப.  அவர்கள், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், தலைமைச் செயலகம், சென்னை-9.

மதிப்புடையீர் வணக்கம்,

பொருள் : வரவேற்பும் வேண்டுகோளும்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெருந்தொற்றின் அபாயத்தினை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறையின் சார்பாக மே மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைத்து எடுக்கப்பட்ட முடிவும், திட்டமிட்டபடி செய்முறை தேர்வு 24-ந் தேதி வரையில் நடைபெறும் என்ற உறுதியுடனான அறிவிப்பும் பெரிதும் வரவேற்க வேண்டிய நல்ல முடிவாகும்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கனிவான வேண்டுகோள் :

கொரோனா தொற்று வேகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று பாசிட்டிவாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பொதுவாக கோடை விடுமுறை ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அறிவிப்பது வழக்கமான நடைமுறையாக தமிழகத்தில் இருந்து வருகிறது.மாணவர்கள் 24ஆம் தேதி செய்முறை தேர்வுக்கு பிறகு பள்ளிக்கு வரமாட்டார்கள். மற்றபடி 1 முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படவில்லை. பெண் ஆசிரியைகளே எண்ணிக்கையில் அதிகமாக பணியாற்றி வருவதாலும், மாணவர்கள் பள்ளிக்கு வராத சூழ்நிலையிலும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவிவரும் நிலைமையினை கவனத்தில் கொண்டும் ஏப்ரல் 25 முதல் பள்ளி கல்வித்துறைக்கு கோடை விடுமுறை விடுவதற்கு தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்து நன் முடிவாற்றி அறிவித்திட வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

பரிந்துரை செய்வதற்கான கனிவான வேண்டுகோள்:

1. மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6.

2.மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை-6.

தங்களின் விரைவு நடவடிக்கைக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்.

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.

அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.

க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட கிளையின் சார்பில் இன்று...

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாலும் கோடை வெப்பம் அதிகரிப்பாலும் உடனடியாக ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வதில் இருந்து விலக்களித்து கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என

தொடக்க, பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் திருநெல்வேலி  மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் கோரிக்கை மனு மின்னஞ்சல் மற்றும் விரைவு அஞ்சலில் (கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிப்பால் நேரில் செல்வது தவிர்க்கப்பட்டது) அனுப்பப்பட்டுள்ளது.

தோழமையுடன்....
செ.பால்ராஜ்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருநெல்வேலி




தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அவர்களுக்கு தமிழ் நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை...  கொரோனா பெருந்தொற்று இரண்டாவது  அலையாக வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு சம்பந்தமான உத்தரவு  தமிழ் நாடு அரசு பிறப்பித்து பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.. இந்நிலையில் மாணவர்கள்  இல்லாமல் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு  வருகை தந்து பணியாற்றி வருகின்றார். இந்த அசாதாரண  சூழ்நிலையை கருதி பள்ளிகள் இயங்குவது குறித்து தெளிவான வழிகாட்டல் வழங்கிட  வேண்டும் என தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் இயக்குநர் அவர்களை வலியுறுத்தி  கேட்டுக் கொள்கிறது.‌


 முனைவர்      மன்றம் நா.சண்முகநாதன்
பொது செயலாளர்     தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம்