தமிழகத்தில் மே 3-ந்
தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில்,
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை
ஒத்திவைக்க பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், 12-ம் வகுப்பு
பொதுத்தேர்வை மே மாத இறுதியில் (அ) ஜூன் மாதத்தில் நடத்தலாம் என
தேர்வுத்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.