2018-2019ஆம்
கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பொருளியல் பாட
முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட
பணிநாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி
பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு
ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 03.02.2021 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு நடைபெற ஏதுவாக
கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் சரிபார்ப்பினை சிறப்பாக
நடத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.