சென்னை
அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி 21.02.2021
ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும்
படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு , இணைப்பில் உள்ள பள்ளிகள் தேர்வு
மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது . எனவே மேற்படி தேர்வின் பொருட்டு
தேர்வறைகள் , தளவாடங்கள் மற்றும் இதர தேர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகளை
செய்யுமாறு சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
தெரிவிக்கப்படுகிறது. 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய
வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு எழுதவுள்ள
மாணவர்களுக்கு தேர்வு மைய விவரங்கள் மற்றும் காலை 9.00 மணிக்கு தேர்வு
தொடங்கி பகுதி I - மனத்திறன் தேர்வு ( Mental Ability Test ) ( MAT ) ,
பகுதி II படிப்பறிவுத் தேர்வு ( Scholastic Aptitude Test ) ( SAT )
நடைபெறும் என தெளிவாக தெரிவிக்குமாறும் , தேர்வு மைய பள்ளி
தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் இருந்து தேர்வு எழுதும்
மாணவர்கள் விவரங்களை சரிப்பார்த்துக் கொள்ளுமாறும் இணைப்பு பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு : தேர்வு மைய விவரம் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் :