வருகிற
16.10.23 முதல் Teacher, student attendance தவிர வேறு எந்த ஆன்லைன், app
பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் என டிட்டோஜாக் சார்பில் தீர்மானம்
நிறைவேற்றி அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
எண்ணும் , எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவேண்டும்
ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு , மாணவர்களின் கல்வித்தரத்தினைப் பாதிக்கும் எண்ணும் , எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். எண்ணும் , எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். செல்போன் மூலம் தேர்வு நடத்துவதிலும் , செல்போன் மூலம் மாணவர் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்வதிலும் , கிராமப்புறங்களில் NET WORK இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.