இந்திய மக்களின் நினைவில் வாழும் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி வீ.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நன்நாளில் ஒன்றிய அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நடுவண் அரசு சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுவது என்பது வழக்கமாக உள்ளது.