நடப்பாண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி தகவல் :

 

நடப்பாண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்குநரத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்து அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். பிறகு அண்ணா பல்கலைகழகம் அரங்கத்தில் அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வு கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.