10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவன் க்ரித்தி வர்மாவை நேரில் சந்திக்க நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூர் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவரின் மகன்
க்ரித்தி வர்மா. நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் இவர்,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில்
முதலிடம் பிடித்தார். மாணவன் க்ரித்தி வர்மா, நான்கு வயது இருக்கும் பொழுது
மின்சாரம்
தாக்கியதில் தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.