லைசன்ஸ் வாங்க இனி 8 போட தேவையில்லை! ஜூலை 1 அம் தேதியில் இருந்துநடைமுறைக்கு வருகிறது:

ஓட்டுநர் உரிமம் பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என அறிவிப்பு.

டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும் என்றால் தனியார் ஓட்டுநர் பள்ளிகளில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடக்கும் சோதனையில் தேர்ச்சி பெற்றால்தான், 8 போட்டு காட்டினால்தான் லைசென்ஸ் வழங்கப்படும்.

இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1 அம் தேதியில் இருந்துநடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.