பாடப்புத்தகங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு NCERT மாற்றியுள்ளதால் , அவற்றில் தங்கள் பெயர்கள் நீடிப்பதில் அர்த்தமில்லை எனக்கூறி 33 கல்வியாளர்கள் தங்கள் பெயர்களை நீக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.
பாடபுத்தகங்களில் பல்வேறு மாற்றங்களை NCERT செய்து வருகிறது.வாக்கியங்களை நீக்குதல் மற்றும் சில பிரிவுகளை அகற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். பரிணாமக் கோட்பாடு, பனிப்போர், முகலாய நீதிமன்றங்கள் மற்றும் தொழில் புரட்சி பற்றிய குறிப்புகள், 2002 குஜராத் கலவரங்கள், இந்தியப் பொருளாதாரத்திற்கு விவசாயத்தின் பங்களிப்பு , ஜனநாயகத்திற்கான சவால்கள் உள்ளிட்ட பிரிவுகள் பாடபுத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
Read More Click Here