சின்ன வயதிலிருந்தே என் அப்பா படும் கஷ்டத்தை பார்த்து பார்த்து நான் படிக்க ஆரம்பித்தேன்.
இந்த கஷ்டத்தை மாற்ற படிப்பு வேண்டும் என நினைத்தேன் என்று திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளி நந்தினி தெரிவித்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 600- க்கு 600 மதிப்பெண்களை பெற்று சாதனை மாணவியானார் திண்டுக்கல் நந்தினி. இவர் அரசு உதவி பெறும் அண்ணாமலையார் பள்ளியில் படித்தவர். தற்போது கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
Read More Click Here