தனியார் பள்ளிக்கு மேசைகளை எடுத்துச்செல்ல அரசுப்பள்ளி மாணவர்கள்; டிராக்டர் பயணம் - இருவர் சஸ்பெண்ட்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி எனும் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.

இந்த பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த 17-ம் தேதி மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் மேசைகள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றி இறக்குவதற்கு, 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அம்மாணவர்கள் டிராக்டரின் பின்பகுதிகளில் நின்றபடி மேசைகளை பிடித்தவாறும், என்ஜின் பகுதியில் சக்கரத்திற்கு மேற்பகுதியில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. READ MORE CLICK HERE