விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி எனும் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.
இந்த பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள தனியார் பள்ளிக்கு
கடந்த 17-ம் தேதி மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் மேசைகள் கொண்டுச்
செல்லப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றி இறக்குவதற்கு, 10-ம் வகுப்பு பயிலும்
மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அம்மாணவர்கள் டிராக்டரின்
பின்பகுதிகளில் நின்றபடி மேசைகளை பிடித்தவாறும், என்ஜின் பகுதியில்
சக்கரத்திற்கு மேற்பகுதியில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட
வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
READ MORE CLICK HERE