தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நல்ல தரமான கல்வியும் மருத்துவமும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மாபெரும் கனவுகளாக இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் தாம் ஈட்டும் வருமானத்தில் ஒரு பெரும் பகுதி இவற்றிற்காகவே செலவு செய்யப்படுகிறது. பல்வேறு நாள்பட்ட சுலபத்தில் தீராத நோய்களிலிருந்து விடுபட்டு முழு நலம் பெற மருத்துவத்திற்கு ஆகும் செலவினங்கள் மிகுதி. ஒரு சிறந்த மருத்துவத்திற்காக இருப்பதை விற்றும், அடகு வைத்தும் வட்டிக்குக் கடன் பெற்றும் உழன்று வாழ்வதன் பின்னணியில் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய விழையும் முனைப்பும் அதனூடாக அடையும் ஆன்ம திருப்தியும் இருப்பதை நன்கறிய இயலும்.
Read More Click Here