இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி..? உடனே விண்ணப்பிக்கவும்..!


தமிழகத்தில் பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக இலவ்ச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து காணலாம்.

சமூக நலத்துறை சார்பாக சத்தியவாணி அம்மையார் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொழில் புரிய ஆர்வம் உள்ள பெண்களுக்கு பயனாக இருந்து வருகிறது. மேலும், இந்த இலவச தையல் இயந்திரம் பெற ஏழை பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திரணாளிகள் ஆகியோர் தகுதியானவர்கள். அவர்களுக்கு ஒரு மாத வருமானம் 12,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது சான்றிதழ்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
வருமான சான்றிதழ்
ஆதார் அட்டை
சாதி சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
தையல் பயிற்சி சான்றிதழ்
உடல் ஊனமுற்றோர் சான்றிதழ் அல்லது கணவனால் கைவிடப்படோர் அல்லது உதவி சான்றிதழ்

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தினை https://cms.tn.gov.in/sites/default/files/forms/social_welfare_form8.pdf என்ற தளத்தில் பதிவிறக்க செய்து கொள்ள வேண்டும்